Back

Article

November 17, 2015

கட்டுரை

SHARE

கட்டுரை

உன் உதடு பார்த்தா
வெயிலில் நிறம் வெளுத்த நீலவானம்
பழுக்க காய்ச்சிய இரும்பாய்
இப்படி சிவக்கிறது..!
என்ன
உன் கருங்கூந்தல் பார்த்து விட்டதோ
இந்த செவ்வானம்
கொழுந்து விட்டெரிந்த
கொள்ளிக்கட்டையை
குளிர்ந்து கிடக்கும்
குளத்து நீரில்
நனைத்தது போல்
நாற்புறமும்
நன்கு கருத்து விட்டதே.!
சரி...சரி
இந்த நட்சத்திரங்களெல்லாம்
நீ சிரிக்கும் போது
சிந்திய எச்சில் சிதறலோ...!
இந்த முழுமதி
உன் முகம் தொட்டொழுகிய
மஞ்சள் துளியோ..!
இந்த வெண் பஞ்சு மேகங்கள்
நீ குளிக்கையில்
கரையாத
சோப்பு நுரைகளோ..!

பெண்ணே
பேரழகே
இப்படி
உன்னெழிலை
நான் வர்ணித்த
வார்த்தைகள் எல்லாம்
என்னை வற்புறுத்தியதால் தானடி
வாய்விட்டு சொன்னேன்
என் காதல்..!
அதற்கா
இப்படி
சினக்கனலில்(கோபச்சூட்டில்)
காய்ச்சி வார்த்தைக் கம்பிகளால்
காயம் செய்கிறாய்
என் இதயத்தை...!

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...