Back

Philosophy

September 25, 2018

ஒரு பைத்தியக்காரனின் டைரிக் குறிப்புகள்

SHARE

ஒரு பைத்தியக்காரனின் டைரிக் குறிப்புகள்

என் சுயத்தை தரிசித்து அதன் நிறை குறைகளை எடை நிறுத்தி பார்த்து என் சரிகளையும் தவறுகளையும் ஆராய்கிறேன். என்னை நானே பல்வேறு கோணங்களில் கேள்விகள் கேட்டு பக்குவப் படுத்திக் கொள்கிறேன். தெளிவு
பெறுகிறேன். சில சமயம் என்னை நானே பைத்தியமாகவும் ஆக்கி விடுகிறேன்.
மனிதன் எப்போது தன் சுயத்தை தரிசிக்கிறானோ அப்போதிலிருந்து அவனுக்கொரு தெளிவு பிறக்க ஆரம்பிக்கிறது. சமூகத்தின் மீது அக்கறை உண்டாகிறது. ஒரு பிரச்சினை எல்லோருடைய நிலையில் இருந்தும் யோசிக்க
ஆரம்பிக்கிறான். இப்படி நானும், என் தனிமை பொழுதிலெல்லாம் தத்துவம் போல் யோசித்து, தறிகெட்டு கிடக்குமிந்த மானுட பிறவிகளுக்கு என்ன சொல்ல முடியுமென எண்ணி பார்க்கின்றேன்.எண்ண கருவூலத்தில் சேரும்
கருத்துகளை அவ்வப்போது எழுதவும் செய்கிறேன். அதன் மூலம் நான் ஆனந்தப்படுகிறேன். ஜீவ சுகம் அடைகிறேன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...