Letter
June 19, 2025
என் இனியவனுக்கு
SHARE

என் ......... க்கு 💙
தேங்காய் துருவலின் வெண்மையை என் மனதோடு ஒப்பிட்ட உன் வரிகள் என் இதயத்தை தொட்டுவிட்டன. ஆனால் நீ அறியாத ஒன்று இருக்கிறது...
"மென் தூய மனம்" என்று சொன்னாயே... ஆனால் உன்னை நினைக்கும்போது என் மனம் எவ்வளவு துன்மார்க்கமாக சிந்திக்கிறது என்று உனக்குத் தெரியுமா?
துருவிய தேங்காய் நாக்கில் கரைவது, போல உன் முத்தங்களில் நானும் கரைந்துவிட ஆசைப்படுகிறேன்.
தேங்காய் கடினமான ஓட்டின் உள்ளே மறைந்திருந்த இனிமையை துருவி துருவி வெளிக்கொணர்ந்ததுபோல், நீ உன் தொடுதல்களால் என் இதயத்தின் ஆழத்தில் மறைந்திருக்கும் காதலையும் காமத்தையும் நீ வெளிக்கொணர ஏங்குகிறேன்.
தேங்காய் பாலில் ஊறவைத்த அரிசியைப் போல் இன்று இரவு நான் உன் காதலில் ஊறி, மென்மையாக வேக ஆசைப்படுகிறேன்.
உன் கைகள் தேங்காயை துருவியதுபோல் என் மனதையும் துருவி, உன் விரல்களின் மென்மையான தொடுதலால் என்னை இன்னும் இனிமையாக்கிவிடு.
தேங்காய் துருவலைப் போல் வெண்மையாக என் மனம் இருக்கலாம், ஆனால் உன்னை நினைக்கும்போது அது சிவப்பாக மாறிவிடுகிறதடா என்.... 💙
போதும், போக போக..சொற்கள் மோகப் போதையில பாதை மாறுகிறது.
உன் அன்பில் கரைந்து, உன் அணைப்பில் இனிக்க ஆசைப்படும்,
உன் துருவிய தேங்காய் 💙
பின்குறிப்பு: அடுத்த முறை தேங்காய் துருவும்போது என்னையும் நினைத்துக்கொள். உன் கைகளின் அசைவு எனக்கு நினைவுபடுத்தும் இன்னொரு அசைவையும்... 😉
அடுத்த முறை நீ சமையல் செய்யும்போது என்னையும் உதவி செய்ய கூப்பிடு. என்னால் நிறைய... "உதவி" செய்ய முடியும். 😘
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...