Back

Poem

December 17, 2022

பொம்பளனா எவ்வளவு எளக்காரம்?

SHARE

பொம்பளனா எவ்வளவு எளக்காரம்?

காத்தல இருந்து
பொழுதோட வரிக்கும்
ஊரங் காட்டுல
போதாத கூலிக்கு
நாயா நரியா
வேல செஞ்சுபுட்டு
இடுப்பு நோவட வந்தாலும்
பொம்பள நாந்தான்
சோறாக்கனுமாம்.

சேரினு சொல்லி
வெறவு அடுப்புல - புவயில
ஊதி ஊழ சிந்தி
வடிச்சு போட்டாலும்

தின்னு புட்டு
மூக்கி மூளி
ங்கொப்ப வூட்டுல இருந்து
என்னாடி கொண்டு வந்த
ங்கொப்பன ஓலி னு அடிக்குற புருசன
அனுசரிச்சு வாழுனுமாம்?

ஏன்னு கேட்டா
ஒன்னுகொன்னு வுட்டு குடுத்து
ஒத்துமியா வாழ்ந்தா தா குடும்பமாம்.

அம்மாந்திமுரெடுத்து
ஆம்மள ஆடும்போது
பொம்பளய மட்டுலும்
பொறுத்து போவச் சொல்லுற
ஒங்க நாயத்துலயும் குடும்பத்துலயும்
எஞ் சாண்ட கரச்சு ஊத்து ங்க போங்க.

எனுக்கு
ஒலச்சு சம்பாரிக்க
தெம்பு தெராணி இக்குது
நா ஒண்டியாவே இருந்துக்கறேன்.

,

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...