Philosophy
September 16, 2021
தத்துவம்
SHARE

அழகான கனவு அபூர்வமாய் சித்திக்கிறது ஆயிரத்தில் ஒருவருக்கு சர்ப்பத்தின் நாவாக அச்சத்தைத் துருத்தி நெளிந்து நீள்கின்றன கெட்ட கனவுகள் கலையும் தறுவாயில்தான் கண்டுகொள்கிறேன்
நல்ல கனவுகளை இரவுக்கு வெளியே கனவுக்குக் காவலிருக்கும் தேவதைகளும் உறங்குகிறார்கள் அவர்கள் கனவுகள் நாம் நுழைய முடியாத நீர்க் குமிழியாகப் பூட்டியிருக்கின்றன.
வெளியிலிருந்து பார்த்தாலும் தெளிவாய்த் தெரிகிறது கபடமற்ற கனவுகள் திரும்பத் திரும்ப வரும் கனவுகளில் திருத்தங்களே இருப்பதில்லை இறுதிக் காட்சியாக விரிந்து கண்ணைக் கொத்தும்
இரக்கமற்ற கனவுகளில் செத்துச் செத்து அலுத்துப்போனது இறப்பதுபோல் எல்லோரும் காண்கிறார்கள் ஏறக்குறைய இரண்டு கனவுகளேனும் பிறப்பதுபோல் வந்திருக்குமா யாருக்கேனும் ஒன்று. -
ஜெ.பிரான்சிஸ் கிருபா அழத் திராணியற்று கிடக்கிறேன். உன்னிந்த கவிதை போல, ஒரு கனவாய் போகக் கூடாதா கவிஞனே உன் மரணம் குறித்து நான் காண்பதும் கேட்பதும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...