Back
Philosophy
August 22, 2021
தத்துவம்
SHARE

சொல்லிக் கொண்டே இருக்கிறாயே
எப்போது சாவாய் என்கிறான்
நண்பனொருவன்.
ரொம்ப காலமாய்
அன்பாயிருங்கள்
அன்பாயிருங்கள்
என்று கூடத்தான்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
அப்படி இருந்து விட்டீர்களா என்ன?
முதலில் அன்பாயிருங்கள் நண்பா.
பிறகு எனக்காக அழ ஆளிருக்கிற தைரியத்தில்
இப்படி நீங்கள் கேளாமலே
என்னுயிர் தானே சாகும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...