Back

Philosophy

August 18, 2021

தத்துவம்

SHARE

தத்துவம்

நீரேந்த குவிக்கும் உள்ளங்கையின் உட்குழிக்குள்ளடங்கும் உன் சிறு முலைக்குள்ளடக்கம் என் சோகமும் காமமும். என் சுண்டுவிரலளவான பருக்கவும் கருக்கவும் செய்யாத உன் உதட்டிடை
சுரக்கும் எச்சிலில் அடங்கும் என் தாகமும் தவிப்பும். சகி பேரன்புத் தேடி ஊருலகிலுள்ள எல்லா பெண்களையும் காதலித்து ஏமாந்து கிடந்த என்னை உன் விரி நெடுங்காதலின் கீழ்
இளைப்பாற்றி தேற்றினாய் நீ. என்னால் தூக்கி சுமக்க முடியாத அளவில் காதலையும் அரவணைப்பையும் அள்ளி கொடுத்து ஆனந்தத்தில் திளைக்கச் செய்தாய். மின்னல்களை ஒடித்து வந்து நமக்கான
விளக்குகளில் சுடராக்கினாய் இடிகளில் சுருதி சேர்த்து பாடலாகக்கியென் துயர் போக்கினாய் நீண்டு பெருகும் வெளிகளின் வழியே நம் பயணங்களை நிர்ணயித்து கூட்டிப்போனாய் எண்ணத்தின்
விரலால் கூட தீண்டி விட முடியாத புதியதொரு உலகை வாழ்வை படைத்து பரிசாக்கினாய் எனக்கு. இதையெல்லாம் செய்த நீ யாரொருவராலும் தயாரிக்க முடியாத துக்கத்தை தயாரித்து நம்
நினைவுகளையே முள்ளாகவும் ஆணியாகவும் செய்து காதலின் சிலுவையில் துடிக்க துடிக்க அறைந்து விட்டு போயிருப்பது சரியா? - பித்தன்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...