Philosophy
December 29, 2020
தத்துவம்
SHARE

வாழ்க்கைங்கறதே வலி வேதனை அவமானம் புறக்கணிப்பு தானா சார்? நம்ம என்ன கொடுக்க, பண்ண அல்லது சொல்ல நினைக்கறோம் னு தெரிஞ்சுக்க கூட விருப்பம் / நேரம் இல்லாம ஒருத்த ங்க செய்யற
புறக்கணிப்போட வலி ரொம்ப கொடுமையானதா இருக்கு சார். அத தாண்டி நம்மள புரிஞ்சு ஏத்துக்க யாரும் இல்லையா? ஒன்ன தொடங்கி முடிச்சு தோத்து போனா கூட அத முழுசா பண்ணிட்ட நிறைவாவது
மிஞ்சும். ஆனா இங்க தொடங்கவே வழியில்லாம உண்டாகுற தோத்த மனநிலைய என்ன னு சார் சொல்றது? இந்த இயலாமைய ஆற்றாமைய எப்படி சார் ஏத்துக்கறது? ஒன்னு வேணா நல்லா புரியுது சார். ஒன்ன
செய்யனும் அல்லது சொல்லனும் னா அதுக்கு பணம் வேணும் அல்லது செயிச்சவன் ங்கற புகழ் வேணும். ஆனா வாய்ப்பே தராம எப்படி சார் செயிக்க முடியும்?உடனே உனக்கான வாய்ப்ப உருவாக்கு னு
சொல்லுவிங்க. ஆனா அதுக்கு இங்க பணம் பிரதானமா இருக்கே சார். சரி விடுங்க சார். விட்டில், வீட்ல விளக்கோட மோதலாம். உச்சியில இருக்க சூரியனோட மோத ஆசப்பட்டா இப்படி தானா? ஆனா
விளக்கோ சூரியனோ எது மேல மோதினாலும் விட்டில் சாகப் போறது உறுதி தான. அதான் சாகறது னு முடிவு பண்ண பிறகு விட்டிலுக்கு விளக்கோட என்ன வேல அந்த சந்திர சூரியனோட மோதி சூடபட்டு
சாகட்டுமே.? சரி தான? @21 Dec 2020
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...