Back

Philosophy

July 15, 2020

தத்துவம்

SHARE

தத்துவம்

செல்லக் கவிதையே...

உன்னை நோகச் செய்வது என் நோக்கமல்ல.
அதெல்லாம் என்னோடு உன்னை தக்கவைக்கத்து கொள்வதற்கான முன்னேற்பாடுகள். அவ்வளவு தான்.

செல்லத் தமிழே, என் தங்கச் சிமிழே...

நீ என் வேண்டுதல்.நீ என் தேவை. நீ என் ஆதாரம். நீ என் ஊக்கம். நீ என் தேடல். உன்னை அடைவதன் பொருட்டாகத் தான் எதையாவது செய்கிறேன். ஆனால் அது சில சமயம் உன்னை வேதனை படுத்தி விடுகிறது.
மன்னித்துக்கொள்.

சதா உன் நினைவுகள் தான் என்னை, என் மனதை ஆக்கிரமித்து சர்வாதிகாரம் செய்கிறது.
உனக்கு எப்படியோ தெரியவில்லை. எனக்கு மட்டும் இந்த விதி உன்னையே நினைவூட்டிக் கொண்டு இருக்கிறது. எப்போதும் உன்னை என்னோடு தொடர்புபடுத்துகிறது.
இந்த வார்த்தைகளையும் இந்த தொடர்புபடுத்துதலையும் நீ எப்படி உணர்கிறாயோ தெரியவில்லை. இதற்குள் தான் உனக்கான உயிரொன்று ஊசலாடிக் கொண்டிருக்கிறது. முடிந்தால், இரக்கம் இருந்தால் அதனை அடையாளம் கண்டு
அன்பு செய். ஆசுவாசப்படுத்து. உயிர்ப்பூட்டு.

இப்படிக்கு
உன்னால் அன்பு செய்யப்பட வேண்டிய நான்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...