Back

Philosophy

January 27, 2020

தத்துவம்

SHARE

தத்துவம்

இங்கு எந்த மதக்கடவுளையும் துவேசம் செய்வது என் நோக்கமல்ல. கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு எத்தனை கேவலமான கருத்துகளைப் பரப்பி இருக்கிறார்கள் பார்பனர்கள்.

உ. தா : சம்புகன் வதத்தைப் படித்து பாருங்கள்.

நீங்கள் பெரிதும் மதிக்கிற கடவுளரின் பெயரைச் சொல்லிக் கொண்டு வர்ண பேதங்களையும் சாதிய மற்றும் பார்பனியக் கருத்துக்களையும் பரப்பி விட்டிருக்கிறார்கள். நீங்களும் கடவுள் பெயரை சொல்லி சொல்லப்
பட்டதால், கடவுளைப் போலவே, அந்த இரண்டாந்தர கருத்துக்களையும் அதே ஆன்மீக உணர்வோடு மதிக்கிறீர்கள். நிற்க.
உங்களுக்கு, அந்த வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் சொல்கிற நியாயப் புறம்பான கருத்துகளை தவறு என்று சொல்லி திருத்த முற்பட்டால், நீங்கள் கடவுளின் மீது கொண்டிருக்கிற மித மிஞ்சிய ஆன்மிக பற்றினால்
(spirituality) போதிக்கப்பட்ட இந்த கருத்துகளில் உள்ள பிழைகளை அல்லது குறைகளை ஏற்க மறுக்கிறீர்கள். எனவே அந்த கருத்துகளைத் தப்பு என்று நிறுவ வேண்டுமாயின், நீங்கள் கும்பிடுகிற கடவுள்கள் தவறானவர்கள்
என்று நிறுவ வேண்டி இருக்கிறது. ஆக, நீங்கள் பெரிதும் மதித்துப் போற்று புராணங்களில் இருந்தே உங்கள் கடவுளுக்கு எதிரான ஆதாரங்களை முன் வைத்து உங்கள் கடவுள்களின் சுயரூபத்தை வெளி காட்ட வேண்டி
இருக்கிறது. நன்கு கவனிக்க வேண்டும். இங்கு நீங்கள் கொச்சை அல்லது கேவலம் என்று சொல்வது உங்கள் கடவுள்களின் சுயரூபத்தையே.
நன்றி.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...