Back

Philosophy

July 11, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

பிரிவின் பின்னான சந்திப்பின் கணத்தில்
நீ அழுது கொண்டிருந்தாய்
நான் உன்னை ஆழப் புணர்ந்து கொண்டிருந்தேன்
காலம் தாண்டிய வெளியில் எதிரொளித்தது
உன் நேச ஓலம்
என்னை பிரிந்திருந்த பொழுதின்
காட்ட முடியாத காதலை எல்லாம்
கண்ணீராய் உகுத்து
விசும்பிக் குலுங்கி அசைந்தாய்
அசைவின் அதிர்வில்
என் குறியிலிருந்து
மீந்தொழுகிய விந்தின் ஒரு துளி கலந்த
உன் கண்ணீரின் சிறு வெள்ளம்
இப்போது என் வானாய் கருவுற்றிருக்கிறது
சகி..
இன்னும் எனக்கான பூமி செய்ய வேண்டும்
அதற்குள்
நீ எங்கு புறப்பட்டு போனாய்
வா.. வந்து கொஞ்சம்
நெஞ்சுக்குமுறியொரு நேச ஓலமிடு.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...