Back
Philosophy
April 26, 2019
தத்துவம்
SHARE

சகி
நீயும் நானும்
வேறு வேறென்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்
எல்லோரும்..
நீர்த்துளி வழி பாயும்
வெள்ளொளி
ஏழு நிறமாய் பிரிந்து
வானவிலாய் தெரியும்.
நீயும் நானும்
அடிப்படையில்
அந்த வெள்ளொளி போல
ஒன்றோடொன்றாய்
இருந்தவர்கள் தான்.
இருப்பவர்கள் தான்.
ஏதோ இயற்கையின்
செயல் பிழையால்
வேறு வேறுடலில்
பாதி பாதி உயிராகி விட்டோம்.
அதை தான் இவர்கள்
நீ வேறு நான் வேறென்று
புரிந்து விட்டிருக்கிறார்கள் போல.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...