Back

Philosophy

April 15, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

செத்து விடத் தோன்றுகிறது.
சக லத்தின் மீதும் பற்றில்லை.
இமை மூடி தற்காலிக சாவையேனும்
தரிசிக்க முயற்சித்து கொண்டிருக்கிறேன்.
மேகம் முகுது தொடுகிறது.
விரிவானத்தின் மேலே
பறந்து கொண்டிருக்கிறேன் போல.
இறக்கைகள்.?
என் எழுத்து தான்.
மேகத்தின் கர்ப்பத்தில்
நீர் போல்
என்னுள் எழுத்து கனத்து கொண்டிருக்கிறது.
கீழே பார்க்கிறேன்.
என் வீடு புள்ளியாய் தெரிகிறது.
என் நிழல் விழும் இடம் தேடுகிறேன்.
கண்டு பிடிக்க முடியவில்லை.
என்னைத் தேடாதீர்கள்.
பிடி பட மாட்டேன்.
என்னை தொடர்பு கொள்ள வேண்டுமெனில்
இதுவரை யாரும் பேசியிராத
எழுதியிராத
கேட்டிராத
ஒரு வார்த்தையை
எனக்காக
உயிரின் ஆழத்தில் இருந்திருந்து
உச்சரியுங்கள்.
அந்த வார்த்தையின்
அர்த்தமாய் ஆகி இருப்பேன் நான்.
இறைக்கிற கிணறு தான் சுரக்கும்.
எழுத எழுத தானே எழுத்து வரும்.
என்னென்னவொ கிறுக்கிறேன்.
என்னவாக இருந்தால் என்ன?
நான் எழுதிக் கொண்டே இருப்பேன்.
நீங்கள் வாசிப்பது எழுத்தல்ல.
உயிர்.
ம் எழுத்தே என் உயிர்.
அவள் போனாள்.
இவளும் போவாள்.
நீங்களும் கூட என்னை நீங்கிப் போவீர்கள்.
என் எழுத்து?
போகாது.
நானுள்ள வரை
நிழல் போல
உயிர் போல
என்னை நீங்காது.
தொடரும்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...