Back
Philosophy
June 24, 2018
தத்துவம்
SHARE

உருகும் மெழுகு ஒளியாகும்
உடையும் கல் சிலையாகும்
எரியும் திரி தீபமாகும்
விழுந்த விதை மரமாகும்
உதிர்ந்த இலை உரமாகும்
செத்த மாடு கூட பறையாகும்
உதவாதென புதைத்தவை
புல் முளைக்கும் மண்ணாகும்
மாறாக எரித்தவை திருநீறாகும்
இயற்கையின் படைப்பில்
பயனற்றது எதுவுமில்லை...
கல்லுக்குள் சிலையென
அணுவுக்குள் ஆற்றலென
உன்னுள்ளும் ஏதேனுமிருக்கும்...
உடைத்து பார்... உடைந்து பார்...
தோற்பது அவமானமில்லை அனுபவம்.
தோற்றுபோ.
அனுபவ உரமேறு.
ர. அஜித்குமார்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...