Back

Philosophy

December 9, 2015

தத்துவம்

SHARE

தத்துவம்

முகிலுக்குள்
முகம் மறைக்கும் நிலவாய்
மார்ப்புக்குள் மனம் புதைத்தவளே
கார்கால மேகம் போல்
உள்ளத்தில் காதல் சுமந்து கொண்டிருந்து
வரண் தேடி வந்த பின்பு
வாய்திறக்கிறாயடி
மரணித்து ஜனனித்த விதை
மலர்(இலை)உதிர் காலத்தில்
முளைத்து விட்டு
தளைத்தோங்க நினைப்பது போலல்வா இருக்கிறது
நம் காதல்
........!
அன்பே
உயிர் நீங்கி போனபின்
ஏங்கி அழுதாலும்
எந்த உயிரும்
கூடு திரும்பாது..!
ஆக அன்பே
பிரிந்த நாம் காதல்
பிரிந்ததாகவே இருக்கட்டும்
இனி
காலக்கிழவன்
கை காட்டும் திசையில்
பயணிப்போம்.....!

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...