Back

Philosophy

November 4, 2015

தத்துவம்

SHARE

தத்துவம்

அழகான பூ விரிப்பே
அடியே என் தேன் சிரிப்பே
கால் வருடும்
கடல் அலை போல்
இதமாய் பதமாய்
இதயம் வருடும்
உன் பார்வை பரிசத்தால் என்னில் தளிர்விட்ட காதல்
எப்போதாவது
எதேச்சையாக
நீ என்னிடம் பேசும் போதெல்லாம்
உன்னிடம் என்னை
பூ நீட்டச் சொல்லும்
அப்படித் தான் அன்றும்
நீ பேசியதால்
என்னில் ஒரு
மெல்லிய பூகம்பம் விசியதால்
மெய் மறந்து
கை பூ நீட்டியது...!
பெண்ணே
அப்போது நீ சொல்லிய வார்த்தைகள்
அனலாய் என் இதயம் வாட்டியது..!

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...