Back

Philosophy

December 16, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

என் ஜீவநதியே எங்கடி போனாய். உன் நினைவின் உஷ்ணத்திலே உயிர் ஆவி ஆகுதடி. பெண்ணைப்போல் ஆணென் கண்கள் அழுகிறதே. என்ன செய்தாய்??? கனவுலக வாசி என்னை என்ன செய்தாய்?? இறப்பே
இயல்பென்று உறவின் நிரந்தரப் பிரிவிலும் அழதாவன் உந்தன் சிறுகாலப் பிரிவிலே ஜீவன் துடிக்கிறேனடி. புத்தகவாசிப்பிலே சுக வாழ்க்கை வாழந்த என்னை பித்தாக்கினதெப்படி??? பெண்ணே
தனிமையே எனக்கு தகுந்த துணையாயிருந்ததடி தனிமையின் ஆழத்திலே ஆனந்தத்தித்து கனவித்து கற்பனையில் வாழ்வையே சுகித்து வாழ்ந்திருந்தேன். ஆனால் இப்போது தனிமை அனலாய் அல்லவா
தகிக்கிறது. அடியே கற்பனா உலகின் கலா ரசிகனென் எதிர்பார்புகள் உன்னால் மட்டுமல்ல இந்த கலியுக காலத்திய பெண்ணெவளாலும் நிறைவு பெறாது. ஆம் நான் சீதை காலத்து சிநேகத்தை
எதிர்பார்கிறேன் கணவனுக்காய் காளனோடும் சண்டையிட்ட சாவித்திரி காலத்து காதலை எதிர்பார்கிறேன் கல்கியின் கதைகளில் வரும் காதலிகளின் கண்மூடித்தனமான கணக்கிலா அன்பை
எதிர்பார்கிறேன் தாஜ்மகால் தீட்ட தனையீந்த தீலோத்தியொடு ஹரின் அனுபவித்த சோனார் கருவிகளும் சொல்ல முடியாத ஆழம் மிகு காதலை எதிர்பார்கிறேன் இதில் ஒன்றுமே உன்னால் ஒண்ணாது. ஆக
அன்பே அருகில் வராதே போ. #மீள்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...