Back

Philosophy

December 4, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

அவள் அப்படிதான் என்பதை விட.
அப்படி இருப்பது தான் அவள்.

எந்த இழப்புகளுக்கும்
உடனே அழ மாட்டாள்.
காலம் தாழ்த்தியே கண் கசிவாள்.

மேதாவித் தனமாக பேசுவாள்.
செல்லக் கடிதலுக்கும்
அப்பாவித் தனமாக
அழுது விடுவாள்❤️.

தொட்டில் பழக்கம் சுடு காடு மட்டும் என்பதை
பசி வரும் போதெல்லாம்
அழுது நிரூபிப்பாள்.

வெள்ளையும்
கருப்பும்
பிடிக்கும் என்பாள்
கருப்பு குலசாமிக்கு ஆகா தென்றும் வெள்ளையை வெளுப்பது கடினமென்றும் அதிகம்
உபயோகிக்க மாட்டாள்.

புலாலுண்பதில்
பெரும் பிரியம் என்றாலும்
கையிருப்பு கருதி
வாரமொருமுறை யோடு
நிறுத்திக் கொள்வாள்.

நிறையவே தின்பாள்
கொஞ்சமும் கொழுப்பும் தசையும்
கூடிப் போனதில்லை.

மற்றவர்களிடத்தில்
நிறைய குறை காண்பாள்
யாரையும் எதையும் மனம் நோகும் படி
சுட்டி காட்டி திட்ட மாட்டாள்👌.

ஆடைக்குள் அழகை போல
இல்லை என்று
அன்பையும்
மறைத்தே வைப்பாள்.
எனக்கு இரண்டுமே தெரிந்து விடும்🙈.

அடிக்கடி
கோபித்து கொள்வாள்
கொஞ்சம் கூட
வெறுப்புமிழ மாட்டாள்❤️.

பிரியத்துக்கு உரிய
யாருக்கேனும் சோகம் நேர்ந்தால்
அது அவளால் என்று
அவளே அனுமானித்து கொண்டு
வெகு தொலைவாகி நிற்பாள்👩.

இந்த கவிதை
அவளை நகலெடுத்தே
வார்த்தைகளிடை நிறுத்தி வைத்திருக்கிறேன்.

இருந்தாலும்
இதிலிருப்பது
"நான் இல்லை " என்றே
வாதாடுவாள்.
ஏனென்று கேட்காதீர்கள்.
அப்படி இருப்பது தான் அவள்.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...