Back
Philosophy
December 2, 2017
தத்துவம்
SHARE

கற்பென்பது
காலிடுக்கில் இருக்கிறதென்ற
கட்டுக்கதையை
யார் கட்டி விட்டதோ?
உடம்பிலிருக்கும் துகிலுரித்து
தோல் கிழியப் புணர்வதில்
தொலைவதா கற்பு?
உடன் பாடில்லாமல்
அம்மணமாகி
பொம்மை போல்
நீயே போய்
மேல் கீழங்கங்களை
கட்டிலில் பரப்பி வைத்து
கால் விரித்து படுத்தாலும்
கற்பு களவாடப்படாது.
புலன்களுக்குள் பொதிந்திருப்பதெல்லாம்
உப்பு சப்பில்லாத
உணர்ச்சிகள் மட்டும் தான்.
உன் சம்மதத்தின் பேரிலே
உன் கற்போடொருவன்
சமரிட முடியும்.
ஆமாம்
"ம்"என்றவொரு
இணங்கலில் இருக்கிறது.
நீ காத்து வைக்க நினைக்கும் கற்பு.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...