Back
Philosophy
November 1, 2017
தத்துவம்
SHARE

விண்மீன் குவியலை
மூக்குத்தியென்றாக்கி
முக்கோண நிலவிலணிந்த நீ
உன் கோரக் கவிதைகளால்
என்னில் தணியாத
ஏதோ ஒன்றை வளர்த்து விட்டாய்.
உன் கவிதையின் ஜீவனாய் மாறத் துடித்து
மோகத் தழலுஷ்ணத்தில்
என் செங்குருதி எல்லாம்
வற்றி
உன் உதடும் விரலும் ருசித்துண்டு களித்து கவிதையென எழுதி வைக்க என்னுள் எஞ்சி நின்ற ஒரு துளி
சுடு ரத்தம் கொண்டெழுதும் கவிதை
உனக்கு பிரியமான பிசு பிசுப்பு கலந்த வாடையோடு
உன் இதழ் தீண்ட காத்திருக்கிறது
வா.... வந்து என் பிரியத்துக்குரிய
உன் உதடுகளால் ரு(வா)சி.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...