Back
Philosophy
October 9, 2017
தத்துவம்
SHARE

நச்சுடைய நாவோடு
காத்து கொண்டிருக்கிறது
ஒரு கனவு
என் இரவையும் உறக்கத்தையும்
காவு வாங்க.
பெருங்காடென வளர்த்திருக்கும்
புருவத்தின் கீழே
வெளிச்சம் சூழ்ந்த
இருட்டுக் குகைவாழ் மிருகமென
என் இரு கண்களுக்குள்ளும்
அந்த கனவு மிருகம்
சிம்மக் கர்ஜனை செய்கிறது.
ஆயுதங்கள் ஏதுமற்ற நான்
ஓடிக் களைத்து
வலுவிழந்து
புலியின் கூர் நகங்களாலும்
ஈட்டியொத்த பற்களாலும்
கிழிபடும் மானென இல்லாமல்
நீல மேகங்களை மறைத்து நிற்கும்
இருட்டு வானமென
பயத்தை
தைரியத் திரையிட்டு மறைத்தபடி
சரணடைகிறேன்.
இனிய இரவு வணக்கம்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...