Back

Philosophy

September 27, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

உறவுக்கு ஒன்றென்ற போது உதிர்ந்த கண்ணீர் ஊருக்கு நேர்கையில் உதிர மறுப்பதேன்? தெருக்கோடியில் ஒட்டுத் துணியும் இன்றி பாலுறுப்புகள் கிழிபட பலாத்காரம் செய்யப்பட்டவள் என்னோடு
ஒட்டி பிறந்தவளாய் இருந்திருந்தால் நான் தடுத்திருப்போனோ? பட்ட பகலில் நட்ட நடு ரோட்டில் தலை வெட்டி எறியப்பட்டவன் என் இளைய தம்பியாய் இருந்திருந்தால் வெட்டுங் கையை
முறித்தொடித்திருப்பேனோ? மலம் அள்ளுந் தொழில் செய்வாரில் என் அப்பனும் ஒருத்தனாய் இருந்திருந்தால் அரசாங்க கழிவறையை அப்படி அசுத்தப்படுத்தால் இருந்திருப்பேனோ? கிழிந்த ஆடை
வழி வழிந்து ஒழுகும் தன் மானத்தை இழுத்து இழுத்து மறைக்கும் சிறுமி என் மகளாய் இருந்திருந்தால் ஆடை வாங்கி கொடுத்து அழகு பார்த்திருப்பேனோ? பெருமாள் கோவில் வாசலில் இருமிக்
கொண்டே கையேந்தி நின்ற அந்த கைத்தடிக்கார கிழவன் என் தாயையோ தந்தையோ ஈன்றெடுத்த என் பாட்டனாய் இருந்திருந்தால் பார்த்தும் பாராமல் கடக்காமல் பாக்கெட்டில் பணம் நிரப்பி
அனுப்பியிருப்பேனோ? உடல் கொடுத்ததுக்கும் உடன் பிறந்ததுக்கும் உபத்திரம் நேரும் போது தான் உயிர் துடிப்போனோ? ச்சீ நான் மனிதனில்லை மனிதனே இல்லை. இல்லை நான் நீ என்று பேதம்
பேசுதல் பிழையென வாதம் செய்த நான் இப்படி இருப்பாதா? கெட்டுப் போன மீனாய் நாறுகிறது என் உடலும் உள்ளமும். சுயநல பேய் என்னை நயவஞ்சகத்நோடு ஆட்டி வைக்கிறது. அதை பயம் களைந்து
விரட்டி மயானத்தில் இருந்து உயிர் கொண்டு மீண்டெழுந்து வரும் பிணமாய் மீள்கிறேன். யோசனையில் ஆழ்கிறேன். கற்பழிப்பு கழுத்தறுப்பு தீவிரவாதம் எல்லாம் திடீர் திடீரென
நிகழ்த்தப்படும் போது தீர்ப்புகளும் தீர்வுகளும் அப்படி இல்லாதது ஏன்? இனி நானே எழுதுவேன் தீர்ப்புகளையும் தீர்வுகளையும்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...