Philosophy
June 30, 2017
தத்துவம்
SHARE

நான் சொந்தமாக்கிகொள்ள நினைக்கும் என் சோகப் பொழுதே வா.... வந்தென்னை என்னை ஆரத் தழுவு... உன்னோடு அளவளாவுகிற போதே என் உறுப்புகளும் உணர்வுகளும் உயிர்க்கின்றன. கனவிலும்
அடையப் பெறாத ஞானத்தை கணப்பொழுதில் தந்து போகிறாய் நீ நீயொரு பெண்ணாயிருந்து விடின் உன்னோடே கழிப்பேன் என் உயிருள்ள நிமிசங்களை. ஆமாம் உன் மீது அத்தனை காதல் எனக்கு. மனிதனை
நேசித்து மனம் நோவதினும் உனை காதலித்து தினம் உயிரெழுதுகிறேன். அடியே என் சோக சொர்க்கமே.... எத்தனை இனியவள் நீ நானே விலக்கி வைத்தும் விருப்பம் கொண்டு நெருங்கி வந்து
நெஞ்சினிக்கிறாய். அழுவதும் சுகமென ஆக்கினாய். தழுவி தழுவி கண்ணின் கரையனைத்தும் நீக்கினாய். என் ஏகாந்த காதலே.... கடன் வாங்கி கவலை பட்டேனும் உன்னை கட்டி தழுவி தினம்
காதலுறும் என்னோடு எப்போதும் உடனிரு.. எப்போதேனும் பிரிய நேருமானால் அப்போதே என் உயிரறு என் பொல்லாதவளே என்னோடு இல்லாதவளே.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...