Back

Philosophy

September 21, 2016

தத்துவம்

SHARE

தத்துவம்

என் உடம்பில் நரம்புகளை விட நகக் கீறல்கள் அதிகம். அங்கத்தில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் எச்சில்பட்டவள். கட்டில் சத்தங்களில் சங்கீதம் கற்றவள். எடைக் கருவி தாங்காத
எடையும் என் தொடைத்தசை தாங்கும். என் மேடு பள்ளங்களில் ஊடாடி உயிர்கறையவே சில ஜீவன்கள் ஏங்கும். எனக்கு நிர்வாணம் அவமானமல்ல. காட்சிப் பொருளாகி போன கவலையுமில்லை.
காசுகொடுத்து கட்டிலுக்கு அழைப்பார் மத்தியில் என்னை மாமிச புதையலாகவே மதிப்பார் மத்தியில் என் மீதும் நேசம் செய்யும் அவனே என் கவலை.! அதை எண்ணி அழுகிறேன் நானுமோர் அபலை.!!!!
ர. அஜித்குமார்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...