Short story
July 10, 2020
சிறுகதை
SHARE

போகிறவர்கள் போகட்டும். விட்டு விடுங்கள். ஒரு கிளியைக் கூண்டிலடைத்து கூட வைத்துக் கொள்வதற்கும், அதற்கு சகல சுதந்திரம் தந்து அதுவாய் வந்து தோள் மீதமர்வதற்கும் வித்தியாசமிருக்கிறது. உங்கள் அன்பை
உணர்ந்திருந்தால் நிச்சயம் திரும்பி வருவார்கள். அப்படி திரும்பி வர வில்லை என்றால் போகிறவர்களை போகட்டும் என்று விட்டு விடுங்கள்.
// //
மேலும் விலகி விட்ட பிறகு உங்களை நினைப்பார்களா மாட்டார்களா, திரும்பி வருவார்களா மாட்டார்களா என்று நினைத்து நினைத்து கண்களை நனைத்துக் கொண்டிருக்காதீர்கள். தினமும் கட்டிப் போகிற கடிகாரம் கையில்
இல்லை என்றாலே அன்றைய நாளே ஊனப்பட்டது போலாகி விடும். அந்த ஜடப் பொருளின் இல்லாமையே அவ்வளவு பாதிக்கிற போது, நீங்கள் அவர்களை நேசித்து இருக்கிறீர்கள், அவர்களோடு பேசி இருக்கிறீர்கள், கெஞ்சி
இருக்கிறீர்கள், சண்டையிட்டு இருக்கிறீர்கள் இத்தனை செய்தும் உங்களின் இல்லாமை அவர்களை பாதிக்காமலா இருந்து விடப் போகிறது.
// //
அப்படியும் அவர்கள் உங்கள் இல்லாமையை உணர்ந்து வருந்தி உங்களைத் தேட வில்லை என்றால், நீங்கள் அன்பு செய்ய வேண்டிய ஆள் அவர் இல்லை. இல்லை, அவரை விட்டு இருக்க முடியாது அவர் தான் உங்களின் உயிர் மயிர்
என்று சொல்வீர்களாயின், அவர் மீது நீங்கள் செலுத்துகிற அன்பு எல்லாம் கான்கீரிட் நிலத்தில் பெய்த மழை போல. வீண்தான்.
// //
வேண்டுமானால் பிரிந்து நின்று பிரியம் செய்யுங்கள்.
💙
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...