Back

Short story

April 10, 2020

சிறுகதை

SHARE

சிறுகதை

நான் நீங்கள் சொல்லுகிற கடவுளையோ குட்டிச் சாத்தானையோ பார்த்ததில்லை.

ஆக, அவற்றின் மீதெனக்கு நம்பிக்கை உண்டாகாமல் இருப்பது நியாயம்.

ஆனால், தீண்டாமை என்பது இங்கு எவ்வளவு பெரிய சக்தியாக இருக்கிறது என்றும், அதன் தாக்கம் எவ்வளவு பெரியது என்றும் நீங்கள் யாவரும் அறிந்ததே.

நீங்கள் கடவுள் என்று சொல்லிக் கொண்டு எதை வேண்டுமானாலும் வழிபடுங்கள்.

குட்டிச்சாத்தான் என்று சொல்லுங்கள் பில்லி சூனியம் என்று சொல்லுங்கள். அதை விட்டும் சக்தி உங்களிடத்தில் உண்டு என்று கூட சொல்லுங்கள். அது நம்பி வருகிறவர்கள் வரட்டும்.

அதைப்பற்றி கவலை இல்லை.

ஆனால் எதன் பெயரைச் சொல்லிக் கொண்டும் மனிதனை மட்டம் தட்டாதீர்கள். தொட்டால் தீட்டு என்று புறந்தள்ளாதீர்கள். நீங்கள் உங்கள் உளச்சான்றின் அடிப்படையில் யோசித்து பாருங்கள். மனிதாபிமான அடிப்படையில்
யோசித்து பாருங்கள்.

மனிதனை மனிதனே மட்டம் தட்டுவது சரியா? மனிதனை மனிதன் தொட்டால் திட்டு வருமா.?

இதெல்லாம் முட்டாள் தனம் என்று தோற்ற வில்லையா உங்களுக்கு?

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...