Back
Short story
March 30, 2020
சிறுகதை
SHARE

கன மழை பெய்தடங்கிய
மையிருட்டு பொழுது.
பௌர்ணமி நாள்.
ரோட்டுக் குழி நீரில் எல்லாம்
பௌர்ணமி நிலாக்கள்.
ஆளாரவமில்லாத அநாதை வீதி.
ஏதோ ஒரு மரத்தின்
பழக் கவுச்சியோடு
குளிர்ந்த காற்று சுழன்றடிக்கிறது.
பழ வாசனை வீசும் திசை நோக்கினால்
கிழ மரமொன்று
காற்றோடு கூடிப் புணர்ந்து
இலைகள் சல சலக்க
இசைந்து
பேயாட்டம் ஆடுகிறது.
அச்சம் நெஞ்சுள்
ஆல மரமாய் வேர் விட்டெழுகிறது.
மரத்தடியில் மண் கிளறி படுத்திருந்த
பழுப்பு இலை நிறத்து
என் வீட்டு செவலையன்
இலையின் சல சலப்பால் விழித்தெழுந்து
என்னோடு நடக்கத் தொடங்கி விட்டான்.
ஏனோ அந்தப் பேய் மரம் இப்போது
தெய்வத் தோன்றலாகத் தெரிகிறது.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...