Short story
February 9, 2019
சிறுகதை
SHARE

அவள மறக்க முடியாம தவிச்ச காலம். அவ நிராகரிப்ப ஏத்துக்க முடியாம தவிச்ச காலம். அவ நினைப்பாவே இருந்தது. மீண்டு வர எதுனாச்சும் பண்ணனுமே தோனுச்சு. அவ பேரு ல ஒரு id அ open பண்ணி அவளுக்கு பதிலா நான்
அவள புறக்கணிச்சா.. அவ எப்படி feel பண்ணுவா.. எனக்காக எப்படி லாம் யோசிப்பா.. எனக்காக எப்படி லாம் எழுது வா னு சிந்திச்சு எனக்கு நானே எழுதிகிட்ட கவிதைகள் இவை(கீழ் உள்ளன) . ஆனா இது அவ மேலான தவிப்ப
இன்னும் அதிகபடுத்திச்சே யொழிய குறைக்கல அதனால விட்டுட்டேன். இப்போ அந்த id என்ன ஆச்சுனே தெரியலே.
நீ வருவாய் என்ற
நம்பிக்கையில்
குறுஞ்சிரிப்பொன்று
என் உதட்டிடையில்
உதிராமல்
காத்திருக்கிறது.
உனக்காக.
எனதொவ்வொரு
வெண் சிரிப்பிற்கும்
கண்ணீருதிர்விற்கும்
நீ மட்டுமே
காரணம் என்பதை
நினைவில் வை.
என்னை
தனிமையெனும்
இருட்றையில்
தள்ளி
தாழிட்டு கொண்டேன்.
உன்னால்.
அன்பு கொண்ட
என் நெஞ்சில்
ஆறாத வடுவானாய்
அன்பே.
என் இருடளர்ந்த
பெருந் தனிமைகள் எல்லாம்
எங்கோ
எட்டாத தொலைவிலிருந்து கேட்கும்
உன் குரலொலியோடு கழிகின்றன்.
உனக்கான நான்
உபரியாய் கிடக்கிறேன்.
பிரியனே
வா
வந்தென்னை
வாரியணைத்துக் கொள்.
மதுர மேறிய இதழ்களில்
மது நிகர்த்த சொற்களில்
என் காதலை
சொல்லக் காத்திருக்கிறேன்.
செல்லக் கண்ணா வா வா.
எரியுந் தழலணைக்க
நீருற்றுவது போல
நீ என் மீது
வெறுப்பு காட்டி
உன் மீதெனக்கிருக்கும்
என் அன்பை அதிகமாக்குகிறாய்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...