Back

Short story

February 5, 2019

சிறுகதை

SHARE

சிறுகதை

எந்த வகையான மனநிலையில் இந்த சமூகம் இருக்கு னு தெரியல. எதையும் அத அதுவா பாக்ற மனநிலைய இங்க யாருக்குமே இல்ல. ஏன் தான் பெண்ணுடல் மேல இத்தனை தினிப்புகளோ? அவள் உடல்
காமத்துக்கானது, விளம்பரத்துக்கானது. அவள் உடற்செயலியல் தீட்டு.... அப்படி பார்த்த ங்கொம்மால உலகத்துல இருக்க எல்லோரும் தீட்டு தான். அந்த உதிரப் போக்கு வர இடத்தில இருந்து
வந்த தீட்டு தான் நாம எல்லோரும். இப்படி தனிமை படுத்தற அளவுக்கு மாதவிடாய் ன்றது தப்பான செயலா? அந்த காலத்தில தனிமைப்படுத்தினது ஏன் னா.. அப்போ இது போல நாப்கின்னோ மருத்துவ
வசதியோ இல்ல. துணி தான். (இப்பவும் பெரும்பாலன கிராம பகுதி ல நாப்கின் வாங்க காசு இல்லாம துணிய பயன்படுத்றவங்களும் இருக்காங்க. மாசத்துல ரெண்டு தடவ, அதிக நாள் (ஏழு நாள்
எட்டு நாள்) ரத்த போக்கு னு பல பிரச்சினைகளுக்கு வைத்தியம் பாக்க வசதி இல்லாமலும் அவஸ்த பட்டு கிட்டும் மாதவிடாய் பத்தின புரிதல் இல்லாமலும் இருக்காங்க..) அந்த ரத்தத்தில
fungies புஞ்சைகள் நுண்கிருமிகள் இருக்கும். அதனால அந்த ரத்தத்தால யாருக்கேனும் நோய் எதுனா வந்திடுமோ ன்றது தான் தள்ளி வச்சதுக்கான மற்றும் குளம், கிணறு போன்ற பொது இடங்கள் ல
குளிக்க அனுமதிக்காததுக்கான காரணம் னு சொன்னாலும், தீட்டு அப்படின்ற ஒரு பெரிய முட்டாள் தனம் தான் இதுக்கு மூல காரணம். இப்போ தான் நாப்கின், மருத்துவ வசதி எல்லாமே நல்லா
இருக்கு ல்ல.. அப்பறம் என்ன பெண்ணுங்களயும் சக மனுசியா பாவிக்கலாமே? ஆனா இந்த சமூதாயம் அப்படி பாவிக்காது. சபரி மலைக்கு பொண்ணுங்கள போகவிடாம தடை பண்ண தான போராடிட்டு இருக்கு.
நூறு வருச இரு நூறு வருச பாரம்பரியம் னு வாய் கிழிய பேச்சு வேற. பாரம்பரியத்த பத்தி பேசுறவனுங்க ஏன் கம்மங்களி ல இருந்து சோத்துக்கும், சப்பாத்திக்கும், கோவணத்துல இருந்து
ஜட்டிக்கும் மாறுனானுங்க? இவனுங்க பண்ற தப்பால இல்லாத மணிகண்டன் - கடவுள் ன்ற வஸ்துவ வேற திட்ட வேண்டி இருக்கு. பூசாரியும் பக்தனும் பண்ற தப்புக்கு சாமிக்கு குத்து. இதோ கீழ
இருக்கே அது மாதிரி தனிமை படுத்தி,இல்லாத பொல்லாத கருமங்கள தினிச்சு வதை பண்ணுற. கொல்லுற கொடுமை வட மாநிலங்கள் ல மட்டும் இல்ல தமிழ் நாட்டுல யும் இது மாதிரியான பேத்தனங்கள்
இன்னும் கடைபிடிக்க பட்டுகிட்டு தான் இருக்கு முடிஞ்சா menses (மாதவிடாய்) ங்கற documentry அ பாருங்க. எத்தனை கீழா மாதவிலக்கான பொண்ணுங்க நடத்தபடுறாங்க ன்றது தெரியும். புள்ள
பெத்துக்றவங்கள மொதல்ல செருப்பால அடிக்கனும். உடல் சார்ந்து எந்த அறிவும் இல்லாம மேட்டர் பண்ண வேண்டியது. பெக்க வேண்டியது.அப்பறம் இப்படி சகட்டு மேனிக்கு ஊர்ல இருக்கு
ஊம்பணான்டி பயலுக சொல்ற தீட்டு,மயிரு மட்ட னு எது எதையோ புள்ளைங்க மேல தினிக்க வேண்டியது. இதுலாம் மாறனும் மாத்தனும் னா பொண்ணுங்க முதல்ல குடும்பம் குட்டி புருஷன் ன்ற அந்த
பொது அமைப்ப உடைச்சு வெளில வந்து தனக்கான குரல தானே கொடுக்கனும். அப்போ தான் இது மாதிரியான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...