Short story
October 15, 2018
சிறுகதை
SHARE

#களவாணி_என்கிற_கலைவாணி.
மொத பொண்டாட்டி
முனியம்மா செத்து போனதுக்கப்றம்
கோவிந்தங் கெழவனுக்கு
நல்லூர்ல இருந்து
ரண்டாந் தாரமா வாக்கபட்டு வந்தவ.
கெழட்டு மரத்துலயும் பூ பூக்ற மாதிரி
கெழவனுக்கு
பூவாட்டம் பொண்டாட்டி.
கெழடுக்கு
ஆறுவது வயசிருக்கும்.
கரும்பு நிறத்துல இருக்க
அவளுக்கு அதிக பட்சம் முப்பது தேருக்கும்.
பெருசு எங்கயாச்சும் வெளில போனா
களவாணிய வூட்டு ல வுட்டு
கதவ வெளில தாழ்போட்ரும்.
குரங்கு கைல பூ மால மாதிரி
கோவிந்தங் கெழவன் கிட்ட மாட்டிகிட்டு
களவாணி பாடுற பாடு
நாய் படுமா நரி படுமா..
அவ சேல ரவிக்கைய எல்லாம்
அவுத்து போட்டு
உள் பாவாடைய
நெஞ்சுக்குழிக்கு மேல ஏத்திக்க்கட்டி
குளிக்கப் போனா
கெழடு கெண்டெல்லாம்
கண்ணுல வெளக்கெண்ணய விட்டுக்கிட்டு
வேடிக்கை பார்க்க கூடிடும்.
வாள மீனு கணக்கா
வழ வழ னு இருக்க
கெண்டக்க கால நீவி
அவ தண்ணி ஊத்துறத பார்த்த
ராமன் கூட..
நடுங்கி போகனும்..
களவாணி
நான் கலைவாணி னு தான் னு சொல்லுறபடி
மத்தூரு மாரியம்மா நோம்பில
நரி வேசங் கட்டுவா.
வெங்கல குரல்ல பாட்டும் பாடுவா
பம்ப சத்தம் கேட்டா போதும்
மாராப்பு துணி மண்ணுல வுழுந்தது தெரியாம சாமியாட்டம் ஆடுவா..
அவ ஆடுறப்போ
ஊரு பொம்பளகளுக்கெல்லாம்
தன் புருசன தேடி கண்டுபிடிச்சு
வீட்டுல பூட்டி வைக்றது தான் மொத வேல..
"தேவடியா.. சாமி ஆடுறாளாம்.. சாமி..
அது பேயோ பூதாமோ" னு
வாயுள்ள சிரிக்கி எல்லாம் வசபட ஆரம்பிச்சிடுவாளுக.
ஆடி முடிச்சு வீட்டுக்கு போனா போதும்
வழக்கம் போல
குவாட்டர குடிச்சிட்டு வந்து
கோவிந்தங் கெழவன்
அவள கொன்னு எடுத்திடுவான்..
கழுதைக்கு வாக்கப்பட்ட ஒத பட்டு தான ஆகனும்
பாவம்
இப்படி அன்னாடம்
அடி தாங்க முடியாம
கெழவன் கட்டுன தாலி கழட்டி வச்சிட்டு
தன் மேல கண்ணா இருந்த
மூக்கன ஓடி போக கூப்டவ
மூக்கன் ஒத்துக்லனு சொன்னதும்
வீட்டு விட்டத்தில
உசுர விட்டுட்டா..
உசுரு போய்
நாக்கு தொங்கி
கண்ணு பிதுங்கி
பொணமா போன பின்னாடியும்
அந்த முகத்துல இருந்த பொழிவும்
குளிப்பாட்டுறப்போ இருந்த மினு மினுப்பும்
அவ களவாணி இல்ல கலைவாணி என
சொல்லிக் கொண்டிருந்தன.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...