Back

Short story

October 11, 2018

சிறுகதை

SHARE

சிறுகதை

ஒரு சிறு புறக்கணிப்பு அல்லது நிராகரிப்பு எத்தனை வலி உண்டு பண்ணுகிறது. அப்போது உண்டாகிற தலித்திய மனநிலை எத்தனை வலியானது. நமக்கு பிடித்த ஒருவர் நம்மை நிராகரிக்கிற போது நமக்குள் உண்டாகிற அவமான
மற்றும் இயலாமை உணர்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
இப்படி ஒரு சிறு புறக்கணிப்பே துயரானதெனில், இந்த மொத்த சமூகத்தாலும் விளிம்பு நிலை படுத்தபட்டு புறந்தள்ளப்பட்டு தீண்டாமை, நிராகரிப்பு செய்யப்படுகிற மக்களின் மனநிலை எப்படி இருக்கும்? எப்படி
துயர்படும். பறையன்,சக்கிலியன் என அவமானப்படுத்தி, எந்த ஒரு நல்லதையும் நுகர விடாமல் ஒதுக்கி ஓராங்கட்டப்படுகிற அவர்களின் மனம் எத்தனை இன்னல்களை அடையும்?
பிரம்மாவின் குண்டியிலிருந்து பிறந்தோம், மண்டையிலிருந்து பிறந்தோம், மயிரி லிருந்து பிறந்தோம், அக்னி சட்டியிலிருந்து பிறந்தோம் என்று மார்தட்டுகிறவர்களே நீங்கள் யாரும் உங்கள் அப்பாவுக்கும்
அம்மாவுக்கும் பிறந்தவர்கள் இல்லையா?
பகுத்தறிவில்லாத மூட்டாள் கூமுட்டைகளே சாதியக் கோட்காடுகள் மற்றும் சான்றிதழ் உண்டானது மற்றும் இன்னும் பின்பற்றப்படுவது யாரும் கீழ்நிலையில் இருக்க கூடாது என்பதற்காகவும் அடித்தட்டு மக்களின்
வாழ்வியலை இட ஒதுக்கீட்டின் மூலமும் சில சலுகைகளின் மூலமும் மேம்படுத்தி எவ்வித ஏற்றத் தாழ்வும் இல்லாத சமூகத்தை உண்டு பண்ணுகிற நோக்கிலுமேயாகும். இதை புரிந்து கொள்ளாமல் இட ஒதுக்கீட்டை நீக்கி
விட்டால் சாதி ஒழிந்து விடும் என்று கூவிக் கொண்டிருக்கிறீர்கள்.
சாதிய பாகுபாடு என்பது சாதிச்சான்றிதழில் இல்லை. உங்கள் மனதில் இருக்கிறது. அதை மாற்றிக் கொள்ளுங்கள். மனித நேய உண்ரவை மேம்படுத்துங்கள். அன்பு செய்யுங்கள். பாலின பேதம், சாதிய பேதத்தை எல்லாம் வீசி
விட்டு எல்லோரும் மனிதர் என்று உணருங்கள். அவர்கள் உங்களுக்குக் கீழிருக்க வேண்டும் என்கிற கீழ்த்தரமான மனநிலை கொல்லுங்கள்.
இன்னும் சில ஊர்களில் தலித்திய மக்களை அடிமை போல் நடத்துவதும் கை கட்டி நிற்கச் சொல்வதுமான கேவலமான செயல்கள் நடந்து கொண்டு தானிருக்கின்றன.தண்ணீர் கேட்டால் தேங்காய் தொட்டில் தருவது. பாத்திரத்தை
மோதி விட்டால் அதை எடுத்தெறிவது இப்படி எவ்வளவு மிருகத்தனமான செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.? மிருகத்தனமா? இல்லை எந்த மிருகமும் இப்படி செய்வதில்லை. ஒன்றை ஒன்று கொன்று அல்லது தின்று கூட
வாழுமேயொழிய, எந்த விலங்கினமும் எந்த விலங்கினத்தையும் தீண்டத்தகாததாக ஒதுக்கி வைப்பதில்லை. பிற விலங்கினத்தை தாழ்த்தி தன்னை முதன்மை படுத்திக் கொள் வதில்லை. அவை அவை தன் செயல் வலியமையின் மூலம்
ஜீவித்து வருகின்றன.
உண்மையிலேயே தலித் என்பது சாதி அல்ல. தலித் என்றால் ஒரு சமூகத்தால் அல்லது ஒரு கூட்டத்தால் புறந்தள்ளப்பட்டவர்கள்/ விலக்கி வைக்கப்படவர்கள் /கடைநிலைபடுத்தப்பட்டவர்கள் என்றே அர்த்தம். அப்படியானால்
இந்த வகையில் பெண்கள், அலி என்று கேலி செய்யப்படுகிற திருநங்கையர், பறையர், சக்கலியர், அருந்ததியர் ஆகிய எல்லோரும் அடங்குவர். எப்போது பிறரை தாழ்த்துவதும் பிறரால் தாழ்த்தப்படுவதும் பெரும்பாவம்
/தவறு என ஆண்டைகள் என தனக்கு தானே தண்டோர போடுகிற கூட்டத்தினர் உணர்கிறார்களோ அன்றே இந்த தலித்திய மனநிலையும் தலித்திய போராட்டங்களும் மாறும்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...