Back

Short story

June 22, 2018

சிறுகதை

SHARE

சிறுகதை

ஒவ்வொன்றுக்கும் ஒரு தானியங்கு தன்மை இருக்கிறது. அது அதை அதனதன் போக்கில் விடுங்கள். தேவையில்லாமல் பாரம்பரியம்,கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுக்கம், பாசம், நேசம் என்று கண்ட கருமாந்திரங்களை
எல்லாம் சுமத்தி அதன் சுதந்திர போக்கை தடை செய்யாதீர்கள். வாழ்தலும் வாழ்க்கையும் ஒரே ஒரு முறை தான். பிறப்பு இறப்பை போல. பிறகெதற்கிந்த ஒன்றுமற்ற வெங்காய ஒழுக்கவியல்கள். பிறரை ஏமாற்றாமலும்
துன்புறுத்தாமலும் யார் எதை செய்தாலும் தவறில்லை. பிறப்பை போல காத்திருந்து எதிர்பார்த்து நிகழ்வதல்ல இறப்பு. சட்டென்று. இமை அசைப்பை போல அத்தனை இயல்பாக எப்போது எப்படி நிகழுமென்றே தெரியாது. ஆக
ஆனந்த களிப்போடு வாழ்வோம். நாம் பெரிதாக பேணி காத்து வைக்கிற இந்த ஒழுக்கத்தில் ஒன்றுமில்லை. ஒழுக்கம் என்ற பெயரில் அவரவர் சுயத்தை அவரவரே கொன்று கொண்டிருக்கிறோம். மண் தின்னப் போகிற உடல். காற்றாக
போகிற உயிர். அவ்வளவுதான். உயிரும் உடலும் பிரிந்த பின் ஒன்றுமில்லை. இரண்டும் உபகாரமில்லாதவை. முடிந்த மட்டும் எப்போது என்னத் தோன்றுகிறதோ அதை அப்போதே செய்யுங்கள். மனசாட்சிக்கு உண்மையாய்
சரியாய்.மற்றபடி மற்றவர்களின் கருத்துகளை எல்லாம் காதுக்குள் அனுமதிக்க வேண்டாம். அவன் இவன் என்று எவனுக்கு பிடித்தபடியும் இருக்க வேண்டியதில்லை. யார் என்ன நினைப்பார்களோ என்ற கூமுட்டை தனங்களை
விட்டொழியுங்கள். உன் வாழ்க்கை. உன் ஆசை. உன் உயிர். உன் உடல். உனக்கு வேண்டியபடி வாழ். மானம் மயிரு மட்டை என்பதெல்லாம் சும்மா. மற்றவர்களின் நம்மீதான மறைமுக சர்வாதிகாரத் தனம்.உனக்கான தானியங்கு
தன்மையோடு உன் வாழ்க்கை வாழ். அவ்வளவுதான்.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...