Short story
April 18, 2018
சிறுகதை
SHARE

இது என்றோ எழுதி பதிவிட்டது எனினும் இப்போதும் பதிவிட வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. நான் எவரொருவரையும் இம்ப்ரஸ் செய்யும் பொருட்டு எதையும் எழுதுவதில்லை.ஆனால்
எழுத்துகளால் சிலர் இம்ப்ரஸ் செயல்படுவது என்பது இயல்பு.இது ஒரு எழுத்தாளனாய் எனக்கு கிடைக்கும் அங்கீகாரம். விலை மதிப்பில்லா பரிசும் கூட. இது கலைக்கும் மனிதனுக்குமான
தொடர்பு.நான் முன்பே சொன்னதை போலத் தான் யாரோ ஒருவருடைய வாழ்க்கையையாவது பிரதிபலிக்கிற அல்லது மாற்றி அமைக்கிற எழுத்துகளே இலக்கியம் எனப்படுகிறது. இதே குணம் தான் என்
எழுத்துகளிலும் இருப்பதாய் கருதுகிறேன். இது இயல்பானது . இது திட்டமிட்டு நிகழ்த்தப் படுவதல்ல. திட்ட மிட்டாலும் நிகழ்ந்து விடாது. இதை நீங்கள் தன்னில்லை விளக்கமாக எடுத்துக்
கொண்டாலும் சரி.அல்லது உங்கள் எண்ணத் தோன்றலுக்கு ஏற்ற படி எப்படி புரிந்து கொண்டாலும் சரி. நான் யாரையும் இம்ப்ரஸ் செய்யும் பொருட்டு எதையும் எழுதுவதில்லை. நன்றி.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...