Short story
December 24, 2017
சிறுகதை
SHARE

வானம் பாடி...... எண்ணச் சிறகு விரித்து ஏறிப் பறந்து வானை கண்ணில் அளந்து வந்து கவிதை செய்வேன்! எங்கும் அன்ன பறவை போல அலைந்து திரியும் அந்த வெண்மை மேகம் பிடித்து வந்து
போர்வை நெய்வேன். விண்ணில் வாழும் மீனை விரட்டி பிடித்து வீட்டில் கண்ணை கட்டும் இருட்டை கழற்றி வைப்பேன்.! கோடி வண்ணம் கொண்டு நிற்கும் வானை கிழித்து நானும் அணிந்து கொள்ள
நல்ல அழகில் ஆடை தைப்பேன். இருள்வான் சோலை எங்கும் இதழ்கள் விரித்து நிற்கும் நெருப்பு பூக்கள் பறித்து நெடுநீள் மின்னல் கயிற்றில் நெருங்க வைத்து கட்டி நெஞ்சில் நின்றப்
பெண்ணின் கருங்கூந் தலிலே நானும் காதல் மணக்க முடிப்பேன். இனிக்கும் தமிழ்சொல் தேடி இதயம் ஈர்த்த அழகை மணிக்கு ஒன்றாய் நல்ல மரபில் வடிப்பேன்! அதைநான் பிணிக்கு மருந்து போல
பாறை நெஞ்சில் வலிகள் ஜனிக்கும் போதி லெல்லாம் சத்தம் போட்டு படிப்பேன்! சின்ன பெண்ணாய் கன்னம் சிவந்து நிற்கும் அந்த அந்தி மகளை எந்தன் அந்த புரம ழைப்பேன்! எந்த பணியும்
இன்றி என்னை கட்டி இழுக்கும் காந்த அழகை கவிதை கட்டி லிலிட்டு களிப்பேன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...