Back

Short story

December 15, 2017

சிறுகதை

SHARE

சிறுகதை

#சர்ச்சைக்குரிய_பதிவு #வாசிக்கும்_முன்_யோசித்து_கொள்ளுங்கள் 👇👇 👉கஞ்சா குடிப்பது என் தினசரி கடமைகளில் ஒன்று. 👉சருகு நிலைக்கு சற்று முந்திய முறுவலான இலைகளை உருட்டி
தூளாக்கி குழலினுள் துருத்தி இரு கைகளுக்கிடையில் நிறுத்தி இறுகப் பற்றி அகண்ட வாய் கொண்ட குழலின் அடிப்புறம் கொழுத்தி வாயை மேல் புறம் பொருத்தி ஒரு மூச்சு உள்ளிழுத்து பெரு
மூச்சு விடும் போது நான் பெறும் போதை அப்பப்பா அது ஆத்ம ஸ்பரிசம். 👉கஞ்சா நெடி நொடிக்குள் மண்டைக்கேறி ஒரு கிறு கிறுப்பையும் சிறு கிளு கிளுப்பையும் தருமே அதற்கு கட்டில்
சுகமும் ஈடில்லை. 👉இடைவேளை இல்லாத சிரிப்பின் சுகத்தையும் அழுகையின் சுகத்தையும் இந்த போதையில் உணர்வேன். 👉உருவமற்ற கையொன்று மண்டையை ஊடுருவி நரம்புகளை மீட்டும்.
👉அண்டத்தின் சுழற்சியை கண் கூட காட்டும். 👉முதலிழுப்பில் கொஞ்சம் புரையேறும் 👉மறு இழுப்பில் இன்பம் கரை மீறும். 👉மூன்றாம் இழுப்பில் சொர்க்கம் கை சேரும். 👉கஞ்சா போதை
கடவுளை காட்டும் 👉சிறகு இல்லமால் சிவலோகம் கூட்டிப் போகும். 👉தத்துவங்கள் தானாய் பிறக்கும். கவிதைகள் எச்சிலோடு எட்டி பார்க்கும். 👉கஞ்சா குளிருக்கு இதம் தரும்
குடித்தவுடன் பாட்டுக்கு சுதி வரும்🎹🎶. 👉இசையை 🎶 போன்றொரு இனிய சுகமிது. 👉காது வழி காற்றேறுதல் இசை🎶 மூக்கு வழி காற்றேறுதல் புகை. 👉உள் சென்ற இசை உணர்வுகளை உருக்கி
கண்ணீராக்கும் 👉உள் செல்லும் (இதன்) புகை உண்மைகளை உளறலாக்கும். 👉இசைக்கும் இதற்குமான வேறுபாடு இவ்வளவே👆. கஞ்சாவின் நெடியில் 👉உள்ளோடும் ரத்தம் சூடேறும் 👉கால்கள்
ரெண்டும் தள்ளாடும். இதோ தள்ளாடி தள்ளாடி உங்களைத் தேடி வருகிறேன். சுற்றிலும் சுவராய் தெரிகிறது. தலையை சிலுப்பி பார்கிறேன். ஒளி கொண்ட ஓட்டையாய் தெரிகிறது என் வீட்டு
திறந்த கதவு. மெல்ல வெளிவந்து முதல் படியில் கால் வைத்து அடுத்த படியை தேடுகிறேன். அதள பாதாளமாய் போகிறது😮. பயத்தில் அப்படி நின்று கொண்டேன். நீங்களே என்னை நெருங்கி
வாருங்கள். (பி. கு :நான் கஞ்சா குடித்ததும் இல்லை. குடிப்பவனும் இல்லை.)

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...