Back
Short story
December 6, 2015
சிறுகதை
SHARE

பூகம்ப பூவே
உந்தன் ஊடே
தேன்துளி தேடிவந்த
வண்டு என்னை
தேக்கி வைத்த
தேன்குளத்தில்
முழுக்கி முழுக்கி
மூச்சடங்க செய்து விட்டாய்..!
பருத்தி செம்பருத்தி
எருக்கு என இருக்கும்
எல்லாப் பூவிலும்
குடைந்து நுழைந்து
தேன் குடித்த என்னை
வெண்பூ பெண் உந்தன்
காலடி காத்துக் கிடக்க செய்தாய்..!
சிங்கார ரிங்காரத்தோடு
கருவண்டு நான்தான்
கருஞ்சிட்டு ஒப்ப
சுதந்திர சிறகு விரித்து
பூவானம் வட்டமிட்டேன்
தேனொழுகும் சூரியப்பூ
நீ என்று தெரிந்தும்
திசை தெரியா பூந்தீவு
உன்னில் புகுந்து விட்டேன்.!
மகரந்தம் தூவி
காற்றில் மணமேற்றி அழைக்கும்
உந்தன் சிவப்பு சிரிப்பு
ஆபத்து அறிக்கை என்றறியாமல்
கோபச் சிரிப்பு சிரிக்கும்
சிவப்பு நெருப்பூ உன்னில்
சிறை புகுந்து விட்டேன்.....!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...