Short story
October 21, 2017
சிறுகதை
SHARE

நிலவும் துங்கிபோனதொரு நிசப்த ராத்திரி. வயிற்றுக்குள் இரை வைத்திருக்கும் மலைப்பாம்பாய் வளைவு நெளிவில்லாமல் நேராய் நீளும் நெடுஞ்சாலை. நேற்றைய ஞாபகங்களை அசைபோட்டபடி நடந்து
கொண்டிருக்கிறேன். இமைத்து திறந்த கணம் அந்த அடர்ந்த இருட்டிலும் அமாவாசை வானத்தில் பளிச்சிடும் விண்மீனாய் பார்வையில் வந்து போகிறது அந்த பரிட்சயமானவனின் பழைய முகம். அவன்
சோடிய ஆவி விளக்கெரிகிற மஞ்சள் வீதியில் விரல் கோர்த்து நடக்கிற சுகம் சொல்லித் தந்தவன். கொடுக்க குறையாதது கல்வி மட்டுமல்ல காதலுமென கற்றுத் தந்தவன். ஈகோ இல்லாத உறவே கடைசி
வரை நிலைக்கும் என்று அடிக்கடி வார்த்தைகளால் காது கடித்தவன். அன்புடையவர்களிடத்தும் அன்புக்குரியவர்களிடத்தும் பேசத்தயங்குவது பெரும்பிழை என்றவன். விலகிப் போவோரைத்தான்
விரும்பத் தோன்றுமென்ற விதி சொன்னவன். அவன் சொன்ன விதி சோதிக்கவே விலகிப் போன என் அலட்சிய அன்பால் இதோ அந்த அவன் கண்களில் ஓரத்தில் ஈரத்துளிகளாய்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...