Short story
August 9, 2017
சிறுகதை
SHARE

#கண்ணகிக்கு. மாசில்லா பொன்னே நேச மழை பொழிந்த வீண்ணே நான் உனை மறந்து போனதென்னே? துரோகமே உருவாகி உனக்கு துணையாதோ? என் காதலே உன்னை தாக்குங் கணையானதோ? உன் உத்தம நேசந்தாண்டி
நான் மாற்றாள் மேல் மையலுற்றதெப்படி? நான் போன பாதையை தவறென்று தெரிந்தும் நீ தடுக்காதிருந்தது தப்படி. தங்கமே.... துணை நாடி வந்த உன்னை துயர்பட்டு வாட செய்த என்னை தீயிட்டு
எரித்தாலும் தீராதே நான் செய்த துரோகம். சேராத போதும் தீராதிருந்த காதல் பாடியவன் நானே உயிர் சேர்ந்த உனை விட்டு ஓடியதெப்படி? ஆறாத ரணமாய் உன் நெஞ்சில் ஆனேனே ஆகாத பொருளென
உனை விட்டு போனேனே.....! நில்லாமல் உன்னை தினம் கொல்லாமல் கொல்லும் நோய் தந்தேனே...! என்னை மன்னிக்க முடியாவிட்டாலும் மறந்துவிடு என் செந்தேனே.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...