Back

Short story

July 26, 2017

சிறுகதை

SHARE

சிறுகதை

இனி என்ன விதி செய்வோம்

இது வரை செய்த விதிகளெல்லாம்
இழவு வீட்டுக்கு போகிற மாலைகளை போல
மணந்தாலும்
ஒன்றுக்கும் உதவாத போது

இனி என்ன விதி செய்வது?

தனிமனித சுதந்திரம் இல்லாத
என் தாய்நாடு திருத்த
நான் செய்ய தரமான
விதி என்ன உண்டு?

மனிதம் செத்து விட்ட
இந்த மகாத்மா தேசத்தில்
என்ன விதி செய்ய?

யோசிக்கிறேன்

விடியல் பொழுதுகள்
எல்லாம் கொலைகளோடும்
கற்பழிப்புகளோடுமே
விடிகிற போது
என்ன விதி செய்து
என்ன பயன்?

முடியாது
என்னால் விதியெல்லாம் செய்ய முடியாது.

முடியும்
என்னால் சொல்ல மட்டும் தான் முடியும்.

இந்த உலகம்
இந்த பிரபஞ்சம்
இந்த அண்டசராசரம்
அழிந்து போவது அல்லது
அழிக்கப்படுவது தான்
நான் சொல்லும் நல்ல விதி.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...