Back

Short story

January 21, 2017

சிறுகதை

SHARE

சிறுகதை


என் இளைய
தமிழகமே...!!

நாம்
ஒன்று திரண்டது கண்டு
நாடே கொஞ்சம்
நடுங்கிப் போயிருக்கிறது.

எருதாட்ட
தடை நீங்க
மடையுடை நீராய்
கூடிய நாம்
எதிர்வரும் காலத்தில்
வரப்போகிற எதிர்ப்புகள்
வராதிருக்க வேண்டுமெனில்
அரசியல் என்னும்
நாற்றமடிக்கும் கிணற்றில்
நாமிறங்கி பழைய கழிவுகளை
தூர்வாற வேண்டும்.

பணம் பார்த்து
வாய்பிளக்கும்
பிணங்களை எல்லாம்
புதைப்போம்.

நமக்கு நாமே
என்று சொல்லி
எவன் எவனோ
நம் வாழ்வை நாசமாக்குகிறான்.

இனியும்
துணியாதிருந்தால்
ஒருநாள் தமிழ்பேசவும்
தடையென்பான்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...