Back

Short story

September 13, 2016

சிறுகதை

SHARE

சிறுகதை

புதினம் #தொடர்ச்சி
4)கையில இருந்த பித்தாள சொம்ப ஓங்கி கீழ வைக்க அது ஒரு பக்கம் ஒடுங்கி எல்லப்பன மூஞ்ச போல சிறுசாகி போச்சு.
பொன்னுதாயி
கண்ணுரெண்டும் அனல் பார்வ வீச எல்லப்பனும் அவன் சொந்த பந்தமெல்லாம் சொல்லிக்காம போய்டாங்க.
ஐஞ்சே நிமிசந்தான் அவுங்க வந்துட்டு போனதுக்கான எந்த அடையாளும் அங்க இல்ல.
அவுங்க போனப்றம் பச்ச தென்ன ஓலைய பொன்னுதாயி எங்கிருந்தோ எடுத்து வந்து வெட்டி பின்னி தெத்து ஒன்ன கட்டி முடிச்சு "வயசுக்கு வந்தப்போ போட்டிருந்த துணியவே போட்டிருந்தா தீட்டு.மாத்து துணி
கொடுக்கனும் புதுத்துணி வாங்குற அளவுக்கு கூட வக்கில்லாம வாழுறேனே"னு யோசிச்ச பொன்னு ஏழைக்கேத்த எள்ளுருண்ட மாதிரி அவ விசேசத்துக்கு போனா வந்தா கட்டுற கத்திரிபூக் கலரு சேலய கத்தரிச்சு
தாவணியாக்கி தந்தா.அத வாங்கி கட்டி கிட்டு பூவு வாடுன மூஞ்சோடயே வந்து தென்னந் தெத்துக்குள்ள உக்காந்துன.மவ முகத்துல வாட்டத்த பாத்தவ "ஏதுக்குடீ இப்போ எதயோ பறிகொடுத்த மாதிரி பாவமா
உக்காந்திருக்கனு"கோவமா கேக்க.நெனப்பு வந்ந பூவு "ஏம்மா எனக்கொரு அக்கா இருந்தான்ற விஷயத்த மறச்சிட்டயே "னு அழுது கிட்டே அவ கேக்க"அழதாடி கண்ணு"னு அழுதுகிட்டே பொன்னு அந்த
கதைய ஆரம்பிச்சா......

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...