Poem
November 20, 2015
கவிதை
SHARE

(கீழுள்ள கவியில் உள்ள "நான்" யாரென்று சொல்லுங்களேன் பார்ப்போம்.)
நான்
நதியொத்தவன்
என்னில் உள்ள
வளைவு நெளிகள்
எண்ணற்றவை.!
நான்
மிதி படுபதற்கென்றே
நிதி திரட்டி
நீட்டப்பட்ட
கருப்பு கம்பளம்...!
நான்
முட்பாதைகளின்
முற்றுப் புள்ளி...!
நான்
என் வளைவு நெளிகளை
கண்ணெடுத்து பாராமல்
கடக்க நினைப்பவர்களை
காயம் செய்வபன்...!
நான்
முடிவிலிக்கு
முன்னுதாரணம்..!
நான்
கடவுளால் சபிக்கபட்டவனா என்று தெரியாது
ஆனால் தினம்
கால்களால் மோட்சிக்கப் படுபவன்.....!
நான்
மழை விந்து
மண் தொடாதபடி தடுத்துவிட்டு
கண் காய்து போய்
கானல் நீராய்
கண்ணீர் வடிப்பவன்...!
நான்
பூமியின்
பூமுகத்தில் விழுந்த
கட்டாயக் கருங்கோடு...!
நான்
அரசனல்லன்
ஆனாலும்
என் முதுகேறி பயணிப்பவர்களை
முறைபடுத்த
மந்திரி சபை
மட்டுமுண்டு....!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...