Back
Poem
January 24, 2016
கவிதை
SHARE

¤அழுகின்ற கவிகளுக்கு
ஆறுதல் சொல்வது
எப்படியடி
என் கண்ணே????
¤செப்படி வித்தை
செய்தாயா என்ன?????
இப்படி
வாய் வறண்டு
போனபின்னும்
என் எழுதுகோல்
உன் பெயரையே
உச்சரிக்கின்றது.
¤அடியே
அன்புடைய ராட்சசியே
என் எழுதுகோல்
நீலமாய்
வெகு நீளமாய்
அழுகின்றது
அமைதியாய்.
¤போதும்
போதும்
இனியும்
அழுவதற்கு
அதனிடம்
ஆற்றல் இல்லை.
¤என் மாயமோகினியே
மௌனம் உடை
மனதின் உணர்வுகளை வார்த்தையால் கடை
உள்ளதைச் சொல்;
¤எதுவாயினும்
ஏற்கின்ற
தைரியம்
எனக்கும்
என் எழுதுகோலுக்கும்
இருக்குமென்று நினைக்கிறேன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...