Poem
August 24, 2021
கவிதை
SHARE

சூழல் :- இந்த கொரோனா கொடுமையினால் அவனை அவளும் அவளை அவனும் சந்தித்துக் கொள்ள முடியாத, சந்தித்து பேசிக் கொள்ள முடியாத சூழல். ஏறத்தாழ இரண்டு வருடங் கழித்து நிகழ்கிறது தணியாத தாக மோக காதலோடு,
யாருமற்ற தனிமையில் நிகழ்கிறது அவர்களின் சந்திப்பு.
கவிதை :-
வாடிக் கிடந்து வருடங்கடந்து
இருவரும் காணக் கிடைத்த தனிப்பொழுதில்
நெடுங் கோடை பின்னாளில்
கொடும் மழை பெய்த அந்நாளில்
மண்ணுழ முந்தும் ஓர் ஏர் உழவனென
முண்டி முந்தி சில முத்தங்களிட்டு
நிலத்தைப் பிளந்தி றங்கும்
கலப்பைக் கொப்பாய்
அவளை நானுழ
இன்பம் இரு அங்கம் முழுதும்
மண் மணமாய் கிளற
கண் மலர - உள்ளே மலர் மலர
கூடிக் கிடந்தோம்!
- பித்தன்
கவிதைக்கான கரு - குறுந்தொகை
"ஈரம்பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர்ஏர் உழவன் போல" - 😁
நாள் :- ஆகத்து 18 2021
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...