Poem
July 7, 2020
கவிதை
SHARE

வர வர எதற்கும் லாயக்கில்லாதவனாகிக் கொண்டிருக்கிறேன். வாழ்வதற்கு மட்டும் இல்லை இப்படி எழுதுவதற்கும் கூட. என்னை போல, நான் வாழும் இந்த வாழ்க்கையைப் போல என் எழுத்தும் பொருளற்றதாய் ஆகிக்
கொண்டிருக்கிறது. ஒரே உள்ளிரைச்சல். தனிமையும் அமைதியும் என்னை விட்டு வெகு தூரம் போய் விட்டன. ஒரு போர்வையைப் போல அடிக்கடி நினைவிலிருந்து ஏதாவதொரு துக்கம் மேலெழுந்து இருளாய் கவிழ்ந்து
நெஞ்சையடைக்கிறது. மௌனம் போர்த்திக்கொள்கிறது உதடு - உதட்டை போல உள்ளத்திலும் வறட்சி. ஆனால் மனது மட்டும் ஓய்வதில்லை. அடிபட்ட விலங்கு போல அனத்திக் கொண்டே இருக்கிறது. நினைவின் நச்சரிப்பால்,
நினைவின் அலைக்கழிப்பால் தலை முழுதும் பாரம். எங்கேனும் முட்டிக் கொண்டால் நன்றாயிருக்குமென்று தோன்றுகிறது. இப்படி சொற்களுக்கிடையில் முட்டிக் கொள்ளுவதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை. ஆமாம் வேறு
எங்கேனும் முட்டி னால் வலிக்குமே. வழி... வலி..நானொரு வழி மறந்த கிளி.. என் வாழ்க்கைக்கு நான் தான் பலி. கிளி.. பலி... நல்லா இல்ல. ஹா ஹா. வாழ்க்கை என்னைப் பார்த்து பழித்து இளிக்கிறது. நீங்களும்
சேர்ந்தே இளியுங்கள். கொஞ்சம் பொறுங்கள். எங்கிருந்தோ கேட்கிறது சகியின் குரல்..
"வலியால் புலம்பி பிதற்றி மொழியிடை உழன்றழுது எங்கேனும் முட்டிக் கொள்ளலாமா என்று யோசித்து வலிக்குமே என்று வேறு வழி இல்லாமல் சொற்களிடையில் முட்டி மோதி மீண்டு கொண்டிருக்கும் என் மூத்தப்
பிள்ளையே (ஆமாம் என் மார்பில் பட்ட முதல் உதடும் எச்சிலும் உனது தானே) என் மீது முட்டிக் கொள் என்னை என் மார் நசுங்க கட்டிக் கொள் நீயெழுதியதைப் போல
அந்தச் சந்தன நிறத்து சதைத்திட்டுகளில்
உன் முகத்தோடு துயரையும்
புதைத்து.... "
விடு...ஐயோ வேணாம்.. விட்டு விடு.. யாரும் வேண்டாம்... சகி யும் வேண்டாம்.. கழுத்து வரை சோகம் ததும்பி நின்றாலும், நான் அதை இப்படி எழுத்து வழியே எழுதித் தீர்த்துக் கொள்கிறேன். இல்லையேல், சாக ஒரு
வழியைப் பார்த்துக் கொள்கிறேன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...