Poem
June 10, 2020
கவிதை
SHARE

நண்பா ஓ நண்பா
எங்கு நீ இருக்கிறாய்..?
வா நண்பனே..
கூடிக் குலவித் திரிந்த நாட்கள் எல்லாம்
கண்ணில் குளமாய் தேங்கி நிற்கிறது
ஒரே தட்டில் உண்டு
ஒரே சட்டையை மாற்றி மாற்றி
அணிந்து போன நாட்களின் ஞாபகம்
கண்ணை நனைக்கிறது
கூத்தும் கும்மாளமுமாய்
சண்டையும் சமாதானமுமாய்
எத்தனை எத்தனை பொழுதுகள்
ஹாஸ்டல் சண்டைகள்
ஆவின் "டீ" கள்
மொட்டை மாடி
நிலாக் கதைகள்
என் அத்தனை காதல் தோல்விக்குமான
உனது ஆறுதல்கள்
காய்ச்சலுற்ற போதான
உன் கிண்டலிடையிலும்
நீ காட்டிய அக்கறைகள்
உள்ளாடையை தவிர
உள்ள எல்லாத்தையும் பகிர்ந்து கொண்டோம் தானே?
காலையில் பேஸ்ட்டுக்கு ப்ரெஸை நீட்டியது முதல்
இரவு ஆவினில் டீ க்கு கை நீட்டியது வரை எல்லாம் உன்னிடம் தான்..
நண்பா..
போக்கிரித்தனங்கள் செய்தோம்
பொழுதுக்கும் ஊர் சுற்றினோம்
கல்லூரி சாலை முழுதும்
கை வீசித் திரிந்தோம்
க்ளாஸை கட் அடித்து விட்டு
கேன்டின் போனோம்
தியேட்டர் போனோம்
ஏன் ஹாஸ்டலில் தூங்கிப் போனோம்
நண்பா.. என் நண்பா
விழித்திருக்கும் எனக்கான
இந்த இரவை விட
நீளமாய் போகும் நம் ஞாபகங்கள்
தோழனே வா
அன்று சுற்றித் திரிந்ததை
சுடச் சுடச் ஹாஸ்டலில்
அரையும் குறையுமாய் சமைத்ததை
எல்லாத்தையும்
நினைத்து நினைத்து
அழ வேண்டும் போலிருக்கிறது
கொஞ்சம் தோள் கொடேன்
அல்லது
மஞ்சள் பூக்கள் உதிர்ந்து கிடக்கும்
"புட் பாத்" வழியாக
ஏன்டா அழற என்று
பீப் க்கள் சொல்லி திட்டிய படி
ஆவினுக்கேனும் அழைத்துப் போயேன்.
@may 9 - 1.23 am
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...