Poem
March 25, 2020
கவிதை
SHARE

என்னை அப்படி எல்லாம் சொல்லாதீர்கள்? நான் அப்படி எல்லாம் இல்லை. இருந்திருந்தாலும் இப்போது மாறி இருக்கிறேன். ஆமாம். எப்படி? உங்களுக்குத் தெரியுமே. வலிக்கிறது. அழுகையாக
வருகிறது. ஆ.... அம்மா. அன்பு செய்யுங்களேன். முடியாதா? என்னாலும் முடியலையே. தவிப்பாய் இருக்கிறது. நினைவு தப்பிக் கொண்டிக்கிறது. வழி தப்பித்தான் எல்லோரும் இங்கு
வந்திருக்கிறோம். எல்லோரும் ஏன் இப்படி தப்பாய் இருக்கிறோம்.? தப்பி வந்ததாலா? தப்பாய் என்றால்? உங்களையே கேளுங்களேன். அன்பு செய்யுதல் என்ன அத்தனை சிரமக் காரியமா? ஹி...
ஹி.. இப்படியா சிரிப்பார்கள்? தரக் தரக்.. நடந்து கொண்டிருக்கிறேன். அன்பெனும் நித்தியப் பெருஞ்சுடர் அணையாதிருக்கிற நாள் வரை பூமிக்கு அழிவில்லை. புலம்புகிறேனா? நிலம்
உதைத்தபடி நீ நான் பிறந்ததே அன்பு செய்யத்தான். அறிய மாட்டீரோ நண்ப நண்பியரே? - பித்தன் (ர. அஜித்குமார்)
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...