Back

Poem

June 8, 2019

கவிதை

SHARE

கவிதை

கல் விழ கலங்கி
வட்ட வட்டமாய்
அலை மீட்டுகிறது குளம்.
தன் சுமை தாளாமல்
தண்ணீரில் மூழ்கும் கல்லாய்
சுயச் சுமை தாளாமல்
உள்ளமிழ்ந்து போகிறேன் நான்.
நினைவுப் பாசி படிந்த
மனதின் அடித் தரையில்
சறுக்கி
விழுந்து
எழுந்து
சறுக்கி விழுகிறேன்.
ஒவ்வொரு விழுதலுக்கும் எழுதலுக்கும் இடையில்
என் சுயம் கொஞ்சம் கொஞ்சமாய் கழன்று
கரைந்து கொண்டிருக்கிறது.
எப்படியோ
எழ எழ விழுந்து
விழ விழ எழுந்து
என் சுயத்திற்கு திதி முடித்து
நானென்ற சுமை களைந்து - நான்
காற்றை போல
கனமில்லாதவனாகி
மன வெளியின் ஆகாச உச்சியில்
ஞான மேகத்தின் கீழ் பறந்து கொண்டிருக்கிறேன்.
கொஞ்சம் அன்னாந்து பாருங்கள்.
ர. அஜித்குமார்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...