Back

Poem

February 23, 2019

கவிதை

SHARE

கவிதை

மரணத்தின் மீது
மனத்திற்கேன் இப்படி ஒரு
மட்டற்ற ஆசையோ?

மரணம் என்னையும்
நான் மரணத்தையும் கொண்டாட வேண்டும்.

தீய்க்கு என்னை
தின்னக் கொடுத்து
கண் துயில வேண்டும்.

உஷ்ணத்தழல் என்னை
ஊடுருவும்
உச்சச் சுகம்
உணர வேண்டும்.

மெல்லக் கால் பற்றி
மேலேறி
உள்ளிருக்கும்
இதயம் தின்று
என்னோடே மடிந்தழியும் தீயை
இப்போதே திருமணம் செய்ய வேண்டும்.

மண்டைக்குள் ஊடுருவி
மனக் கழிவத்தனையும்
மறக்க செய்து
தழுவலின் இன்பத்தில்
தானாய் அலற வைக்கும்
தழல் மகளை
ஈன்றது யாரோ?

உங்கள் மகளாய் இருந்தால்
உடனே அனுப்பி வையுங்கள்.

நானின்றி வாழாதாள் என்னை
நாணத்தோடு தழுவும்
நாள் எதுவோ?

எல்லோரும் வெறுக்கும்
நான் என்ற
நடக்கும் பொய்
அவளின் தீண்டலில்
மெய்யாகும்.

இழி மொழியிலென்னை
வசை பேசுவாரும்
அவள் உண்டு விட்ட
என் எச்சத்தை
திருநீறு என
தினம் பூசுவார்.

அவள் கொண்டு போன பின்னென்னை
கொண்டாடி பேசுவார்.

அடியே
அனல்காரியே
என்னை புலன் விசாரணை செய்ய
புறப்பட்டு வாடி.

இந்த சதை வீட்டில்
சிறைபட்டிருக்கும்
என்னை உயிர் பறவையை
திறந்து விட்டு போடி.

#ரொம்ப_பழசு

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...