Back

Poem

January 24, 2019

கவிதை

SHARE

கவிதை

யாரையும் சாராமல் தன்னியல்பாக, தற்சார்பாக, ஒழுக்கம், கலாச்சாரம், மதம், சாதி போன்ற எல்லைகளற்று வானையே சிறகளக்கும் ஒரு பறவையை போல, கண்ட இடத்தில் கால் மடக்கி படுத்து உறங்கும் விலங்கினம் போல வாழ
வேண்டும் என்கிறேன். நீங்கள் என்னை பயித்தியக்காரன் என்கிறீர்கள். சரி தான். உறவுகளை ஆடையாக வரித்து கொண்டு திரிகிற உங்களுக்கு மத்தியில் அவைகளை கிழித்து விட்டு வெளி வரத் துடிக்கும் நான் பயித்தியம்
தான். கூட்டை விட்டு வெளி வரத் துடிக்கும் வண்ணத்துபூச்சி கூட்டில் அடைந்து கிடக்கும் புழுக்களுக்கு அந்நியமாகத் தான் தெரியும். தப்பில்லை.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...